ETV Bharat / state

நடப்பாண்டில் 10 பிஎச்டி கல்லூரிகள் தொடங்கப்படும் - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி உறுதி

author img

By

Published : May 5, 2022, 12:51 PM IST

Updated : May 5, 2022, 1:38 PM IST

நடப்பாண்டில் 10 பிஎச்டி கல்லூரிகள் தொடங்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில்  சட்டப்பேரவை - கேள்வி பதில் நேரம்
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் சட்டப்பேரவை - கேள்வி பதில் நேரம்

சென்னை: சட்டப்பேரவை இன்று (மே.5) கூடியதும் முதலில் வினாக்கள் விடைகள் நேரம் (கேள்வி பதில் நேரம்) நடைபெற்றது. உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது, அரக்கோணம் சட்டப்பேரவை உறுப்பினர் ரவி அரக்கோணத்தில் பிஎச்டி கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.

அரக்கோணத்தில் பிஎச்டி கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் - அரக்கோணம் எம்எல்ஏ ரவி
அரக்கோணத்தில் பிஎச்டி கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் - அரக்கோணம் எம்எல்ஏ ரவி

இதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "நடப்பாண்டில் 10 பிஎச்டி கல்லூரிகள் ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்தார். மேலும் அந்த பகுதியில் ஆய்வு செய்து அதற்கான வசதிகள் இருந்தால் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என்றார்.

நடப்பாண்டில் 10 பிஎச்டி கல்லூரிகள் தொடங்கப்படும் - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி உறுதி

இதேபோல கே.வி.குப்பம் பகுதியில் மகளிர் கலைக் கல்லூரி அமைக்க அரசு ஆவணம் செய்யுமா என கே.வி.குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகன் மூர்த்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, "அந்த பகுதியில் ஏற்கனவே அரசு கலைக் கல்லூரி உள்ளதாக தெரிவித்தார்.

கே.வி.குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகன் மூர்த்தி எழுப்பிய கேள்வி
கே.வி.குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகன் மூர்த்தி எழுப்பிய கேள்வி

எனவே அந்த பகுதியில் புதிதாகக் கல்லூரி அமைக்க எந்த ஒரு நோக்கமும் இல்லை, அவசியமும் இல்லை. வரும் காலங்களில் நிதி நிலைக்கேற்ப பரிசீலனை செய்யப்படும் என பதிலளித்தார்.

சட்டப்பேரவை - கேள்வி பதில் நேரம்
சட்டப்பேரவை - கேள்வி பதில் நேரம்

இன்று 2022-23ஆம் ஆண்டிற்கான போக்குவரத்து துறை மற்றும் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: வழக்கம்போல் விடைத்தாள் திருத்தப்படும்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: சட்டப்பேரவை இன்று (மே.5) கூடியதும் முதலில் வினாக்கள் விடைகள் நேரம் (கேள்வி பதில் நேரம்) நடைபெற்றது. உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது, அரக்கோணம் சட்டப்பேரவை உறுப்பினர் ரவி அரக்கோணத்தில் பிஎச்டி கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.

அரக்கோணத்தில் பிஎச்டி கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் - அரக்கோணம் எம்எல்ஏ ரவி
அரக்கோணத்தில் பிஎச்டி கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் - அரக்கோணம் எம்எல்ஏ ரவி

இதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "நடப்பாண்டில் 10 பிஎச்டி கல்லூரிகள் ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்தார். மேலும் அந்த பகுதியில் ஆய்வு செய்து அதற்கான வசதிகள் இருந்தால் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என்றார்.

நடப்பாண்டில் 10 பிஎச்டி கல்லூரிகள் தொடங்கப்படும் - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி உறுதி

இதேபோல கே.வி.குப்பம் பகுதியில் மகளிர் கலைக் கல்லூரி அமைக்க அரசு ஆவணம் செய்யுமா என கே.வி.குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகன் மூர்த்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, "அந்த பகுதியில் ஏற்கனவே அரசு கலைக் கல்லூரி உள்ளதாக தெரிவித்தார்.

கே.வி.குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகன் மூர்த்தி எழுப்பிய கேள்வி
கே.வி.குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகன் மூர்த்தி எழுப்பிய கேள்வி

எனவே அந்த பகுதியில் புதிதாகக் கல்லூரி அமைக்க எந்த ஒரு நோக்கமும் இல்லை, அவசியமும் இல்லை. வரும் காலங்களில் நிதி நிலைக்கேற்ப பரிசீலனை செய்யப்படும் என பதிலளித்தார்.

சட்டப்பேரவை - கேள்வி பதில் நேரம்
சட்டப்பேரவை - கேள்வி பதில் நேரம்

இன்று 2022-23ஆம் ஆண்டிற்கான போக்குவரத்து துறை மற்றும் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: வழக்கம்போல் விடைத்தாள் திருத்தப்படும்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Last Updated : May 5, 2022, 1:38 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.